முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டதாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டதாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிவிட்டது. தமிழகம் ரூ. 5 லட்சம் கோடி கடன் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த ஒராண்டு ஆட்சி குறித்து சொல்ல ஒன்றும் இல்லை. கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை முதலமைச்சராக்குவோம் எனக் கூறிய வைகோ, தற்போது ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே தனது நோக்கம் எனக்கூறியிருப்பது தொடர்பாக நீங்கள் வைகோவிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
மேலும், தமிழகம் பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், ஒவ்வொருவர் கருத்திற்கும் பதில் சொல்ல முடியாது என்றும், மதத்தால் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதே தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு என்றார். ஆட்சியாளர்கள் ஊழல் செய்து சுமையை மக்கள் மீது திணிப்பதாகவும், இதனால் நாடும், மக்களும் கடனில் உள்ளதாக அவர் கூறினார்.